அரபு இராச்சியம் நோக்கி, விரைந்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் இடம்பெறவுள்ள 5 ஆவது இந்திய சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) இந்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக அரங்கில் குறிப்பாக அரபுகளின் இராஜதந்திரம் என்பது ஒரு விசித்திரமானதாக இருந்தாலும் அதனை வெற்றி கொண்டு முன்னே செல்ல அலாதியான ஆற்றலும் திறமையும் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக முதல் நிலை நாடுகளின் ஆதரவும்,உந்துதலும் இல்லாமல் அரபு நாடுகளில் எந்த ஒரு நாட்டுக்கும் நெருங்கமுடியாது. அவ்வாறு நெருங்க முயற்சி செய்தால் அது வெறும் பகல் கனவுதான். அந்த கனவின் மயக்கத்தில் அரபு நாடுகளிடம் பிச்சைப்பாத்திரத்தில் அரபிகள் அள்ளிக் கொட்டுவார்கள் என்ற கற்பனையில் செல்லும் தலைவர்கள் அநியாயமாக அந்த நாடுகளின் பொதுப்பணத்தை வீணாக வாரிக் கொட்டுவதும் நேரத்தை வீணாக்குவதும் மட்டும்தான் எஞ்சியிருக்கும் என்பதை இன்னும் விளங்கிக் கொள்ளாமை இந்த நாட்டு மக்களின் துரதிருஷ்டமாகும்.
ReplyDelete