Header Ads



நீரில் மூழ்கியது புத்தளம் - போக்குவரத்து பாதிப்பால் மாற்று வழிகள் அறிவிப்பு


கடும் மழையுடனான காலநிலை காரணமாக புத்தளம் பகுதியில் உள்ள சில வீதிகள் சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திற்கு நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

புத்தளம் நகரிலிருந்து கொழும்பு செல்லும் வீதி பாலாவி பிரதேசத்தில் நீரில் மூழ்கியுள்ள அதேவேளை, புத்தளம் – குருணாகல் வீதி அரலிய உயன, 2 ஆம் கட்டை, தம்பப்பண்ணி ஆகிய பிரதேசங்களில் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி வீதிகள் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அவ்வீதியை பயன்படுத்துபவர்கள் மாற்றுவீதிகளில் பயணிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

No comments

Powered by Blogger.