Header Ads



முன்னாள் 3 அரசியல்வாதிகளுக்கு எதிராக பிடியாணை


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரொஜர் செனவிரத்ன ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று -15- பிடியாணை பிறப்பித்துள்ளார்.

வழக்கு நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகாததன் காரணமாக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் ராட் அல் ஹுசைன் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த போது, ​​பௌத்தலோக மாவத்தை மற்றும் ஹெவ்லொக் வீதிகளில்  போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கை அடுத்த வருடம் மார்ச் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.