தற்போதைய ஆட்சியின் மீது, மக்களின் நம்பிக்கை பறிபோயுள்ளது - அமைச்சர் விமல் வீரவன்ச
தற்போதைய ஆட்சியில், மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
எதிர்பார்த்ததை செய்யாமல், எதிர்பாராததைச் செய்வதன் மூலம், தற்போதைய ஆட்சியின் மீது, மக்களின் நம்பிக்கை பறிபோனதாகவும், அமைச்சர் கூறினார்.
அமைச்சர் விமல் வீரவன்ச தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை குறிப்பிட்டு, இவ்வாறு தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், விமல் கூறிய பல கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுவதை விளக்கும் வகையில், இந்தப் பதிவை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்களின் மத்தியில், மக்களின் அவநம்பிக்கை மற்றும் விரக்தியை போக்க அரசங்கம் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை விரைவில் பலப்படுத்தப்பட வேண்டும்.
நாட்டுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை ஆவணங்களை அமைச்சரவையில் கொண்டு வந்து ஒரே நாளில் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, போதுமான விவாதம் நடத்தி, போதுமான காலத்துக்குள் அவற்றை ஏற்றுக்கொள்வது மிகவும் பொருத்தமானது என்றும், அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment