Header Ads



திரைப்பட காட்சியைப் போன்று, கொழும்பில் நடைபெற்றுள்ள திகிலூட்டும் சம்பவம்


போதைப்பொருள் கடத்தல்தாரியை கைது செய்வதற்காக சென்ற வேளையில், பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார்.

இராஜகிரிய − ஒபயசேகரபுர பகுதியில் காரில் வருகை தந்த போதைப்பொருள் வர்த்தகர், காரில் தப்பிச் செல்ல முயற்சித்த வேளை, அங்கிருந்த பொலிஸ் அதிகாரி, திரைப்பட பாணியில் காரின் முன்பக்கம் பாய்ந்து தொங்கிய நிலையில், சந்தேகநபரை கைது செய்ய முயற்சித்துள்ளார்.

இவ்வாறு தொங்கிய பொலிஸ் அதிகாரியுடன், சந்தேகநபர் காரை சுமார் ஒரு கிலோமீற்றர் வரை செலுத்திய நிலையில் அதன்பின்னர் பொலிஸ் அதிகாரி காரிலிருந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி, பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த பொலிஸ் அதிகாரிக்கு தலை மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பல சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளதாகவும், இது ஒரு திரைப்படம் என்று நினைக்குமளவுக்கு மக்கள் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் மூத்த காவல்துறை அதிகாரி கூறினார்.  

No comments

Powered by Blogger.