Header Ads



கட்டுக்கதைகளே தடுப்பூசி போடாதிருக்க காரணம் - Dr பிரசன்ன குணசேன


(எம்.ஐ.அப்துல் நஸார்)

தவ­றான தகவல்கள் கார­ண­மாக கொழும்பு மாவட்­டத்தில் 60 வய­துக்கு மேற்­பட்ட 40,000 பேர் தடுப்­பூசி போ­டாமல் உள்­ளனர் என அரச மருந்­தாக்கல் கூட்­டுத்­தா­ப­னத்தின் தலைவர் டாக்டர் பிர­சன்ன குண­சேன தெரி­வித்­துள்ளார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் உரை­யாற்­றிய டாக்டர் குண­சேன, ஒரு வகை தடுப்­பூசி மற்­றொன்றை விட சிறந்­தது அல்­லது ஒரு குறிப்­பிட்ட வகை மட்­டுமே வெளி­நா­டு­க­ளுக்கு செல்லும் நபர்­க­ளுக்கு சிறந்­தது போன்ற கட்­டுக்­க­தைகள் கார­ண­மாக பலர் தடுப்­பூ­சி­களை எடுக்க மறுப்­ப­தாகத் தெரி­வித்தார்.

‘தடுப்­பூசி பெறு­வதைத் தடுக்கும் வித­மாக நோய்கள் அல்­லது குறை­பா­டுகள் உள்­ள­வர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை என்ற போர்­வையில் வேறு சில கட்­டுக்­க­தை­களும் சமூக ஊட­கங்­களில் பரவி வரு­கின்­றன. உண்­மையில், ஏனைய நோய்­களைக் கொண்­ட­வர்­களே முதலில் தடுப்­பூ­சியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்’ எனவும் அவர் தெரி­வித்தார்.

நோயை எதிர்த்துப் போரா­டு­வ­தற்கும், பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் நிலைமை மோச­ம­டை­யாமல் இருப்­பதை உறுதி செய்­வ­தற்கும், தடுப்­பூசி எந்­த­வொரு வகையைச் சேர்ந்­த­தா­யினும் விரை­வாகப் பெறு­வதன் முக்­கி­யத்­து­வத்­தையும் டாக்டர் குண­சேன விளக்­கினார்.

‘தடுப்­பூ­சியின் ஒவ்­வொரு வகையும் மற்­ற­யதைப் போலவே வினைத்­தி­ற­னான­தாகும் என்­ப­தோடு வெற்­றி­க­ர­மா­ன­து­மாகும். ஆனால் சில­வற்றில் மற்­ற­ய­வை­களை விட கொவிட் -19 உடன் வரும் சளி மற்றும் காய்ச்­சலைத் தடுக்கும் திறன் இருக்­கலாம். இதில் முக்­கி­ய­மா­னது என்­ன­வென்றால், எந்­த­வொரு கொவிட்-19 தடுப்­பூ­சியும் கொவிட்-19 கார­ண­மாக இறக்கும் வாய்ப்பை சடு­தி­யாகக் குறைக்கும் ஆற்றல் கொண்­ட­வை­யாகும். இத­னால்தான் கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் என்றும் அனைவரும் தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.- Vidivelli

No comments

Powered by Blogger.