Header Ads



இந்தியாவில் 3 முஸ்லிம் சிறுவர்கள் மர்மமாக படுகொலை


இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் ஜமீன் அலி (15), முகமது ஆசாஃப் (17) மற்றும் ஜைத் (16) மர்மக் கொலை.

செவ்வாய்க்கிழமை 06.07.2021 மாலையில்  ஆற்றில் குளிக்கச் சென்ற பின்னர் காணாமல் போன மூன்று சிறுவர்களின் சடலங்கள், உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தின் பஹேரி வட்டாரத்தில் உள்ள கிச்சா ஆற்றில் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன. .

விபத்தில் அவர்கள் இறந்துவிட்டதாக பொலிசார் கூறினாலும், சிறுவர்கள் இரக்கமின்றி கடுமையாக தாக்கப்பட்ட, கழுத்து அடித்து உடைக்கப்பட்ட, உடல்கள் மிகவும் மோசமாக சிதைக்கப்பட்டு கிடைத்திருக்கிறது.

ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கிவிட்டதாக முன்னர் கூறிய பரேலி போலீசார், உடல்களை பிரேத பரிசோதனை அறிக்கைக்கு அனுப்பியுள்ளனர்.

இறந்த சிறுவர்கள் நீரில் மூழ்கி இறக்கவில்லை, அது ஒரு கொலை என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.

"அவர்களின் உடல்கள் படுகாயமடைந்து, வாய் மற்றும் மூக்கில் இரத்தப்போக்கோடு இருந்தது என்கிறார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைகி ராஜீவூன்.

No comments

Powered by Blogger.