Header Ads



யானையின் தாக்குதலில் உயிரிழந்தவருக்கு, கொரோனா தொற்று உறுதியானது


ஹம்பாந்தோட்டை கெடென்வெவ பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தைக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

35 வயதுடைய ஷானக காரியவசம் என்ற நபரே காட்டு யானைத் தாக்கி நேற்று (06) உயிரிழந்தார். இதேவேளை உயிரிழந்த இவருக்கு ​மேற்கொள்ளப்பட்டக் கொரோனா பரிசோதனையில், அவருக்குக்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயரிழந்தவருக்கு மரண பரிசோதனைகளை முன்னெடுத்த அதிகாரி, பொலிஸ் அதிகாரி, பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட உயிரிழந்தவரின் பிரதேசத்தைச் சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.