Header Ads



SJB பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு


நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியில் ஜயந்திபுர சந்திக்கு அருகில் நேற்று (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தி தரப்பினர் உள்ளிட்ட சிலருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தலங்கம காவல்துறையினருக்கு கடுவலை நீதிவான் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறையினரால் கடுவலை நீதிமன்றுக்கு அறிக்கையிடப்பட்டது. 

இதற்கமைய தொலைக்காட்சி நிறுவனங்களிடம் உள்ள திருத்தப்படாத காணொளிகளை பயன்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


No comments

Powered by Blogger.