Header Ads



பட்டம் விடும் போது விபத்து - குழந்தை உட்பட மூவர் பலி


காலி - மக்குலுவ பிரதேசத்தில் பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் 5 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். 

கட்டுமான பணியில் இருந்த வீட்டின் கூரையின் மீது ஏறி பட்டம் விட்டுக் கொண்டிருந்த போது கூரை உடைந்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். 

குறித்த விபத்தில் உயிரிழந்த ஏனைய இருவரும் 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.