மோட்டார் சைக்கிளில் வேகமாக சோதனைச்சாவடி தடுப்பைக் கடந்த இளைஞர் - பின்னாலிருந்தவர் தூக்கி வீசப்பட்டு பலி (வீடியோ)
அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் 2 இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது சோதனைச் சாவடியில் தடுப்பு கேட்டை கீழே இறக்கிய வனத்துறை அதிகாரி, வாகனத்தை நிறுத்தும்படி பலமுறை கை அசைத்தார். ஆனால் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த இளைஞர், தலையைக் கீழே குனிந்தபடி சோதனைச் சாவடியை தடுப்பைக் கடந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த இளைஞரின் தலை இரும்புத் தடுப்பில் மோதி, அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுனரான இளைஞர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தெலுங்கானா மாநிலம் மச்செரியல் மாவட்டத்தின் ஜன்னாரம் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. 22.05.2021
Post a Comment