நிந்தவூர் பிரதேசத்தில், பராமரிப்பற்ற காணி சுவீகரிக்கப்படும்
அம்பாறை, நிந்தவூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்கள் சுவீகரிக்கப்பட்டு அரசுடைமையாக்கப்படவுள்ளதாக, நிந்தவூர் சுகாதார வைத்தியதிகாரி திருமதி பரூஸா நக்பர் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதால், டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்திப்பவர்கள் ஒரு வார காலத்துக்குள் துப்புரவு செய்யுமாறும் அவர் அறிவித்துள்ளார்.
டெங்கு நுளம்பு பரவாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருத்தல், அவற்றின் வதிவிடத்தை முற்றாக அழித்தல், வதிவிடத்தில் இனம் பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானதாகுமென சுட்டிக்காட்டினார்.
டெங்கு நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறச் சூழலை பொதுமக்கள் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.
அத்துடன், வெற்றுக் காணிகளை வைத்திருப்போர் ஒரு வார காலத்துக்குள் காணிகளைத் துப்புரவு செய்ய வேண்டுமெனவும், தவறுபவர்களுக்கெதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அக்காணிகள் அரசுடமையாக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
எம்.எஸ்.எம்.ஹனீபா
Ha ha ha
ReplyDeleteஆக மொத்தத்துல ஐடியா நீங்கதான் கொடுக்கீங்க. பிறகு பாராளுமன்றம் வரைக்கும் போய் உரிமை கேட்டு சாகணும். ஓவரா சீன் போடாம நிதானமாக இரும்மா..
ReplyDelete