Header Ads



உயிர்த்த ஞாயிறு தாக்குதலும், மறக்கடிக்கப்படும் உண்மையும் - கத்தோலிக்க சபை, கிறிஸ்தவ குழு அறிக்கை


தமிழில்: எம்.எச்.எம் நியாஸ்

பைபிளில் இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது, “சத்­தியம் உங்­களை விடு­தலை செய்யும்”

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இந்­நாட்டில் கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மற்றும் சில சுற்­றுலாப் பய­ணி­களின் உணவு விடு­தி­களை இலக்­காகக் கொண்டு மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­குதல் நடை­பெற்று இரண்டு வரு­டங்கள் பூர்த்திய­டைந்­து­விட்­டன. அத்­தி­னத்தை முன்­னிட்டு, நீதி­யையும் உண்­மை­யையும் வேண்டி தமது எதிர்ப்பைக் காட்டும் முக­மாக சில நிகழ்ச்­சிகள் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. பைபி­ளின்­படி நீதி நிலை­நாட்­டப்­படும் முன் உண்­மையை வெளிக்­கொண்டு வரு­வது கட்­டா­ய­மாகும். அசத்­தி­யத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஏற்­ப­டுத்­தப்­படும் நீதி ஒரு அநீ­தி­யாகும்.

ஏற்­க­னவே நடை­பெற்­றுள்ள விசா­ர­ணை­களின் படியும் விஷேட ஜனா­தி­பதி ஆணைக்­குழு மூல­மா­கவும், பாரா­ளு­மன்­றத்தில் பேசப்­பட்ட சில கருத்­துக்கள் மூல­மா­கவும், மேற்­படி உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் ஐ.எஸ். ஐ.எஸ்­ஸினால் மேற்­கொள்­ளப்­பட்­டது என்ற முடி­வுக்கு வர­மு­டி­யா­துள்­ளது. மேற்­படி தாக்­கு­த­லுக்கு மறை­மு­க­மான சில­ரது பங்­க­ளிப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது என்­பதை இந்­நாட்டில் மட்­டு­மன்றி வெளி நாடு­க­ளி­லுள்ள புத்­தி­ஜீ­வி­களில் அநேகர் எடுத்துக் கூறி­யுள்­ளனர். அவர்­க­ளது கூற்­றுக்­க­ளுக்­கான நியா­யங்­களை கீழ்­வரு­மாறு பட்­டி­யற்­ப­டுத்த முடியும்.

இந்­தி­யா­வுக்குச் சென்­ற­தாகக் கூறப்­படும் பெண் பற்­றிய உண்­மை­யான நிலைப்­பா­டென்ன? பொலிஸ் அதி­காரி ஒரு­வரே அப்­பெண்ணை இந்­தி­யா­வுக்கு கூட்­டிச்­சென்­றுள்ளார் என்­பதன் உண்மை நிலை­யென்ன? D.N.A பரி­சோ­தனை ஒன்றை நடத்­தி­யதன் மூலம் அப்பெண் இறக்­க­வில்லை என்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பின்பும் அது விட­யத்தில் மீண்டும் ஒரு தடவை D.N.A பரி­சோ­த­னை­யொன்று நடத்­தப்­பட வேண்­டு­மென்று அரசு கூற­வேண்­டி­யதன் கார­ண­மென்ன? மேற்­படி தாக்­கு­த­லுடன் உள­வுத்­து­றையில் கட­மை­யாற்­றிய சில அதி­கா­ரி­க­ளுக்கும் தொடர்­புள்­ளது என்ற கூற்றின் உண்மை நிலை­யென்ன? அது பற்றி விசா­ர­ணைகள் நடை­பெற்­றுள்­ள­னவா? அர­சாங்­கத்தின் முன்னாள் பாது­காப்பு அதி­கா­ரி­களில் சிலர் ஆணைக்­கு­ழு­வுக்கு முன்­பாக சாட்­சி­ய­ளிக்­கும்­போது, மேற்­படி தாக்­கு­த­லுக்குப் பின்­பு­லத்தில் ஒரு சிலர் உள்­ளனர் அல்­லது சதி­யொன்­றுள்­ளது என்று கூறி­ய­போ­திலும் அது பற்றி விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­ட­னவா?

மேற்­படி பல விட­யங்கள் பற்­றிய விப­ரங்­களை கண்­ட­றி­வ­தற்கோ அல்­லது அவை பற்­றிய விசா­ர­ணை­களை நடத்­தும்­படி கூறு­வ­தற்கோ கத்­தோ­லிக்க சபை முன்­வ­ரு­வ­தாகத் தெரி­ய­வில்லை. கிறிஸ்­தவப் பார்­வையின்படி நீதி நிலை­நாட்­டப்­படல் வேண்டும் என்று கூறி­னாலும் அது பற்றி கிறிஸ்­தவ சபை­யினால் மறைக்­கப்­பட்­டி­ருக்கும் சில உண்­மை­களை முன் கொண்டு வரு­வதே எமது இக்­கட்­டு­ரையின் நோக்­க­மாகும். உயிர்த்த ஞாயி­றன்று நடை­பெற்ற தாக்­கு­த­லையும் அதற்கு முன்பும், பின்பும் முஸ்லிம் மக்­களை நோக்கி நடத்­தப்­பட்ட வெறுப்பை ஏற்­ப­டுத்தும் தாக்­கு­தல்­க­ளையும் இங்கு பிரித்­துப்­பார்க்க முடி­யா­துள்­ளது. உயிர்த்த ஞாயி­றன்று நடை­பெற்ற தாக்­குதல் பற்­றிய உண்மை மற்றும் நீதியை நிலை­நாட்­டு­வது கட்­டா­ய­மாகும். ஆனால் அதேவேளை அது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட தாக்­குதல் பற்­றிய உண்மை மற்றும் நீதி­யுடன் தொடர்­புள்­ளது என்­ப­தையும் நாம் மறக்க முடி­யாது.

உயிர்த்த ஞாயி­று தாக்­குதல் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் ஆகி­யன வெளி­நாட்டு ஏகா­தி­பத்­தி­ய­வா­திகள் மற்றும் இன­வா­தி­களால், மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சிகள்தான் என்­பதும் நாட்டின் ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்­காக நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்கள் தான் என்­பதும் உள்­ளங்கை நெல்லிக்­கனி போன்று தெளி­வா­கி­விட்­டன.

உயிர்த்த ஞாயி­றன்று நடை­பெற்ற தாக்­கு­த­லுடன் அதற்கு முன்பும் பின்பும் மட்­டு­மல்­லாது அதற்­கண்­மை­யிலே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளின்­போது பலர் கொல்­லப்­பட்­டனர். அதில் இரு சாரார் கொல்­லப்­பட்டும், அதன் மூலம் பாதிப்­புக்­குட்­பட்­ட­வர்­க­ளு­மா­வார்கள். அவர்கள் (கத்­தோ­லிக்க மற்றும் சியோன் சபையைச் சேர்ந்த) கிறிஸ்­த­வர்கள் மற்றும் முஸ்­லிம்­க­ளு­மாவர். அவ்­வாறு பாதிக்­கப்­பட்­ட­வர்­களுள் அன்­றைய தினத்தில் தேவா­ல­யங்­க­ளுக்கு வந்த சில ஹிந்­துக்­களும், பௌத்­தர்­களும் உள்­ளனர். எனவே உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் பற்­றிய உண்மை மற்றும் நீதியைக் கோரி நிற்கும் உண்­மை­யான, நேர்­மை­யான கிறிஸ்­தவ போராட்­ட­மாக அது இருப்பின் இந்தப் போராட்­டத்தில் பாதிக்­கப்­பட்ட மேற்­படி (கிறிஸ்­தவ மற்றும் முஸ்­லிம்­க­ளா­கிய) இரு­சா­ராரும் ஒன்­றாக இணைந்து செயல்­ப­டு­வது கட்­டா­ய­மாகும். அவ்­வாறு எமது எதிர்ப்பைக் காட்டும் விட­யத்தில் மௌலவி ஒரு­வரை மட்டும் இணைத்துக் கொள்­வது அர்த்­த­மற்­ற­தாகும்.

அது சஹ­ரான்­க­ளுக்கு எதி­ராக பெரும்­பான்மை முஸ்­லிம்­க­ளுடன் இணைந்து நடத்­தப்­படும் போராட்­ட­மாகும். ஆனால் அவ்­வா­றான ஒரு முயற்­சிக்­காக நாம் இரு சாராரும் இன்­று­வரை இணைந்து செயல்­ப­டா­தி­ருந்­தது ஒரு துர­திஷ்­ட­மான விட­ய­மாகும். அவ்­வாறு நாம் இணைந்து செயல்­பட முன்வரா­விடில், உண்­மை­யி­லேயே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை உரு­வாக்­கி­ய­வர்­க­ளுக்கும் பெரிய மூளை­சா­லி­க­ளுக்கும் தேவை­யான அநீ­தியே தழைத்­தோங்க இட­ம­ளிக்­கப்­பட்­டு­விடும்.

புத்தர் சிலையை உடைத்தல் போன்ற சில பிரச்­சி­னைகள் ஏற்­ப­டினும் அது பற்றி நடத்­தப்­படும் விசா­ர­ணைகள் பூதா­க­ர­மாக எடுத்துக் காட்­டப்­பட்­டுள்­ளது. ஆனால் அதேவேளை நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அளுத்­கம, திகன, மினு­வாங்­கொடை ஆகிய பகு­தி­களில் நடத்­தப்­பட்ட பல தாக்­கு­தல்கள் பற்­றிய விசா­ர­ணைகள் கிடப்பில் போடப்­பட்­டுள்­ளது. மேலும், பல வரு­டங்­க­ளாக இந்த நாட்­டி­லுள்ள பெரும்­பான்மை சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் சஹ்ரான் குழுவின் நெறி­த­வ­றிய நட­வ­டிக்­கைகள் பற்றி பொலி­ஸா­ருக்கும், உரிய அதி­கா­ரி­க­ளுக்கும் பகி­ரங்­க­மா­கவே முறைப்­பா­டு­களை செய்­துள்­ளனர். அது மட்­டு­மன்றி சஹ்­ரா­னு­டைய குழு­வுக்கு எதி­ராக அவர்கள் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் நடத்­தி­யுள்­ளனர். ஆனால் அவை பற்­றிய விசா­ரணை செய்­வ­தற்கு அரசு முயற்­சி­களை மேற்­கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. விசா­ர­ணை­களை மேற்­கொள்வோர் அம்­மு­றைப்­பா­டு­களை மறந்து விட்­டது போலவே முறைப்­பாடு செய்­த­வர்­களும் அது விட­யத்தை மறந்து விட்­டார்கள். பெரும் மூளை­சா­லியை தேடும் படலம் வெறும் போலி­யான நட­வ­டிக்­கை­க­ளாக மாற்­றப்­பட்டு, மொத்­த­மான குற்­றச்­சாட்­டு­க­ளையும் குறித்த ஒரு­வ­ரது தலை­யிலோ அல்­லது ஒரு சாரா­ரது தலை­யிலோ போடப்­பட்­டுள்­ளது. அதன் மூலம் இந்த விசா­ர­ணை­யின்­போது உண்­மையை மூடி மறைக்கும் படலம் வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இது விட­யத்தில் நீதியும் ஒழுங்கும் நிலை­நாட்­டப்­பட வேண்­டு­மெனில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் சரி­யான குற்­றா­வா­ளியைக் கண்­டு­பி­டித்­தாக வேண்டும். அவ்­வாறு இந்த விசா­ரணை முறை­யாக சரி­யாக நடை­பெ­று­மானால் குறித்த தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்­த­வர்­க­ளையும் அவர்­களின் இந்த தாக்­கு­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­வர்கள் யார் என்­ப­தையும் எளி­தாக கண்­டு­பி­டித்­து­விட முடியும்.

மேற்­படி தாக்­கு­த­லுக்­கான பெரும் மூளை­சாலி யார் என்­பதை பலத்த முயற்­சி­களின் பின்­பா­வது கண்­டு­பி­டித்துக் கொள்ள முடியும். ஆனால் அது விட­யத்­தில உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் பற்­றிய விசா­ர­ணையை மட்டும் தனி­யாக வேறு­ப­டுத்தி விசா­ர­ணை­களை மேற்­கொள்­வதில் பய­னில்லை. மாறாக அந்த தாக்­கு­த­லுக்கு முன்பும் பின்பும் நாட்டில் முஸ்­லி­ம்­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்ற தாக்­குதல் பற்­றியும் யுத்­த ­கா­லத்தில் நடை­பெற்ற காணாமால் போனோர், ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொலை செய்­யப்­பட்­டமை போன்ற விட­யங்­க­ளின்­போது அவற்றின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்­ப­தையும் அவற்றின் பெரும் மூளை­சாலி யார் என்­ப­தையும் கண்டுபிடிக்­க வேண்டும்.

“உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­த­லுக்கு பின்­ன­ணியில் இருந்­த­வர்­களைப் பகி­ரங்­கப்­ப­டுத்­துங்கள்” என்ற சுலோ­கமே நியா­யங்­களைக் கோரும் செயல்­பாட்டின் சுலோ­க­மாக இருக்க வேண்டும்.

இன்று வரை, இந்­நாட்­டி­லுள்ள உத்­தி­யோ­க­பூர்வ கத்­தோ­லிக்க சபைக்கு உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் பற்­றிய ஆணைக்­கு­ழு­வினால் வழங்­கப்­பட்ட அறிக்கை மற்றும் பல்­வேறு அமைப்­புக்­களின் மூலம் விப­ரங்கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அதன்­படி மேற்­படி தாக்­குதல் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் ஆகி­யன வெளி­நாட்டு ஏகா­தி­பத்­தி­ய­வா­திகள் மற்றும் இன­வா­தி­களால், மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சி­கள்தான் என்­பது தெளி­வாக விளங்­கி­விட்­டது. இது போன்ற தாக்­கு­தல்கள், இதற்கு முன்பு நடை­பெற்ற அநே­க­மான தாக்­கு­தல்­களைப் போன்று, நாட்டின் ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்­காக நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்கள் தான் என்­பது உள்­ளங்கை நெல்­லிக்­கனி போன்று தெளி­வா­கி­விட்­டன. அவை அவ்­வாறு நடை­பெ­ற­வில்­லை­யாயின் அதற்­கான கார­ணத்தை கிறிஸ்­தவ மொழியில் கூறு­வ­தானால் அவற்றை கிறிஸ்­தவக் கண்­களைக் கொண்டு பார்க்­கக்கூ­டாது. மாறாக அவற்றை நவீன ‘ஹெரொத்’வரு­டைய நவீன ‘பரிசி’யர்­க­ளது பார்­வையால் இப் பிரச்­சி­னை ­நோக்­கப்­படல் வேண்டும்.

எமது இந்த சிறு குறிப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு முன்பும் பின்பும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்ற சில தாக்­கு­தல்கள் பற்றி குறிப்­பிட்­டுள்ளோம். உண்­மை­யி­லேயே இந்த நாட்­டி­லுள்ள பாதிக்­கப்­பட்­டுள்ள அனைத்து மக்­க­ளுக்­கா­கவும், குறிப்­பாக நாட்டில் வாழும் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக சுதந்­தி­ரத்­துக்கு முன்பும் பின்பும் வெளி­நாட்டு ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­க­ளாலும் அவர்­க­ளது உள்­நாட்டு பிர­தி­நி­தி­களும் உள்­நாட்டு, இன­வாதத் தலை­வர்­களும் ஒன்­றாக இணைந்து செயல்­ப­டுத்­தப்­படும் ஒரு செய­லா­கவே இதைக் கண்டு கொள்ள வேண்டும். தமிழ் மக்­க­ளுக்கான எதிர்ப்பும் முஸ்லிம் மக்­க­ளுக்­கான எதிர்ப்பும் அச்­செ­யற்­பாட்டின் விளை­வாகும். அது போன்ற நாச­கார சிந்­த­னையைத் தலையில் வைத்துக் கொண்­ட­வர்­க­ளுக்கு ஒரு போதும், ஒரு நாளும் உண்மையான நியாயத்தின் பக்கம் திரும்ப முடியாது.

அதில் ஆச்­ச­ரி­ய­மான விடயம் என்­ன­வெனில் அவற்றின் மூலம் பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் அதனை விளங்கிக் கொள்­ளா­தி­ருப்­ப­தே­யாகும். அதன் விளை­வாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் அவர்­க­ளுக்கு எதி­ராக தாக்­குதல் நடத்­தி­ய­வர்­க­ளது தேவை­களை நிறை­வேற்றும் வண்ணம், போலி­யான உண்­மை­யையும் போலி­யான நீதி­யையும் கோரி போரா­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

“அவ்­வாறே உங்­க­ளுக்­காக (ஏனையோர்) ஏதேனும் செய்­வதை நீங்கள் விரும்­பு­கின்­றீர்­களா? அதையே நீங்கள் ஏனை­யோ­ருக்கும் செய்­யுங்கள்” எனும் கிறிஸ்­தவ கூற்­றுக்கு ஏற்ப வர­லாறு நெடு­கிலும் அவர்­க­ளது கண்­க­ளுக்கு எதி­ரி­லேயே, பல­ருக்கு அநீதி இழைக்­கப்­பட்ட போது அவர்கள் மௌனி­க­ளா­கவே இருந்­துள்­ளனர்.

கிறிஸ்­தவ மக்கள் என்ற வகையில் தமக்­காக மட்­டுமே நீதியை வென்று கொள்­வ­தற்கு முடி­யுமா என்­பதை பைபி­லுக்­கேற்ப எண்ணிப் பார்ப்­ப­தற்கு இதனை ஒரு சந்­தர்ப்­ப­மாக்கிக் கொள்ள வேண்டும். அப்­போது எதிர்­கா­லத்­தி­லா­வது ‘நீதி’ ஊற்­றெ­டுத்து ஓடிக்­கொண்­டி­ருக்கும் ஒரு நீரோடை போன்று இயங்கும் நாடொன்றைக் கட்டியெழுப்பும் கிறிஸ்தவ அழைப்புக்கு நேர்மையாக பதில் கூற முடியும்.- Vidivelli

No comments

Powered by Blogger.