Header Ads



சம்பந்தன் சுகயீனம் - 3 மாத விடுமுறை வழங்கியது பாராளுமன்றம்


தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கான 3 மாத கால விடுமுறையை நாடாளுமன்றம் இன்று -19- அங்கீகரித்தது.

எதிர்கட்சிகளின் அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த கோரிக்கைக்கு இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது. 

இதன்படி மே 18ஆம் திகதி முதல் எதிர்வரும் 3 மாதங்களுக்கு இருவரும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாதிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சுகயீனமுற்றிருப்பதால் இந்த விடுமுறை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.