Header Ads



அள்பளிப்பு காரை வாங்க முடியவில்லை - தாயையும், சகோதரனையும் அனுப்பிய முகமது சிராஜ்


கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதால், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, இளம்வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமான 6 இந்திய வீரர்களுக்கு புதிய காரை பரிசாக வழங்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு மஹிந்திராவின் தார் SUV கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதனை அவரது அண்ணனும், தாயாரும் சென்று பெற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து நெகிழ்ச்சியாக இன்ஸ்டாவில் பதிவிட்ட சிராஜ் “இந்த தருணத்தில் எனக்கு வார்த்தைகளே வரவில்லை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

உங்களது அழகான பரிசை பற்றி நான் எப்படி உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்த முடியவில்லை. இதற்காக ஆனந்த் மஹிந்திரா சாருக்கு பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், எதிர்பாராதவிதமாக இந்த காரை வாங்க நான் வரமுடியவில்லை. என் அம்மாவும், என் அண்ணனும் அதை பெற்றுக்கொண்டனர்” என பதிவிட்டுள்ளார்.

தற்போது, ஐபிஎல் தொடருக்காக பெங்களூரு அணியுடன் சிராஜ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

No comments

Powered by Blogger.