Header Ads



9 மாவட்டங்களில் 30 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன


9 மாவட்டங்களில் உள்ள சுமார் 30 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்றும் பல்வேறு பகுதிகளில் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்றார்களா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

நிட்டம்புவ பகுதியில் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் வாகனங்கள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு கடும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

பாதுக்க நகரிலும் இன்று சுகாதார வழிமுறைகளை மீறி செயற்படுவோரை கண்டறிவதற்கான விசேட தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.


No comments

Powered by Blogger.