Header Ads



ஒரேநாளில் 2,102 பேர் பலி - 3 இலட்சம் பேர் பாதிப்பு - இந்தியாவில் கொரோனா அவலம்


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை புதன்கிழமை ஒரே நாளில் இந்தியாவில் 3 இலட்சத்தை நெருங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,616,130 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா தீநுண்மித் தொற்றால் புதன்கிழமை ஒரே நாளில் 2,102 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 182,553 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,95,041ஆக உயர்ந்தது. அதேசமயம் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21 இலட்சத்தைக் கடந்துள்ளது. 

No comments

Powered by Blogger.