Header Ads



வாப்பாவும், உம்மாவும் இல்லை - அம்மே, தாத்தே என்ற நிலை வரப்போகிறது - சாணக்கியன் Mp (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

தமிழ் தேசிய கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்து செல்வதற்கு காரணம் பொய் செய்திகளை பரப்புவதனால் ஆகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

வீடியோ

அம்பாறை மாவட்டம்   கல்முனையில் சனிக்கிழமை(27) மாலை  இடம்பெற்ற பரிணாமம் என்னும் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்து செல்வதற்கு காரணம் பொய் செய்திகளை பரப்புவதனால் ஆகும்.நான் தமிழ் முஸ்லீம்கள் ஒன்றாக வாழ வேண்டும் என வலியுறுத்தி வருபவன்.திருகோணமலைக்கு சென்ற வேளை கூட அங்கு ஒருவர் வடக்கு கிழக்கு நிலைமைகள் வேறு.வடக்கில் 20 வருடங்கள் சென்ற பின்பு பிள்ளைகள் அப்பா அம்மா என்று தான் கூறுவார்கள்.கிழக்கு மாகாணத்தில் வாப்பா உம்மா என்று தான் கூறுவார்கள் என கூறியிருந்தார்.அந்த இடத்தில் நான் கூறியிருந்தேன்.கிழக்கு மாகாணத்தில் 10 ,15  வருடங்களுக்கு பிறகு அம்மாவும் அப்பாவும் இல்லை.வாப்பாவும் உம்மாவும் இல்லை.அம்மே தாத்தே என்று தான் சொல்வார்கள்.ஏனென்றால் கிழக்கு மாகாணத்தை தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை மாற்றி கிழக்கு மாகாணத்தை பெரும்பான்மை கொண்ட சமூகமாக கொண்டு வருவது தான் அரசாங்கத்தின் நோக்கமாகும்.அதற்கு சிலர் கைக்கூலியாக செயற்படுவார்கள் என்றார்.

2 comments:

  1. Very True Mr. Sanakkiyan..

    ReplyDelete
  2. நன்றி சாணாக்கியன். 1985 அம்பாறைக் கலவரம், 1990 காத்தான்குடி தாக்குதல் வடபகுதி முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என தமிழரையும் முஸ்லிம்களையும் அன்னியப்படுத்தும் சம்பவங்களே தொடர்ந்து இடம் பெறுகிறது. மாறாக ஒருங்கிணைக்கும் செயல்பாடுகளை இரு புறத்திலும் உள்ள உங்களைப் போன்றவர்கள் இணைந்து செயல்ப்படுத்த வேணும்.

    ReplyDelete

Powered by Blogger.