மன வேதனைகள் இருந்தபோதிலும், வீரர்களின் மனநிலையை பாதிப்படையச் செய்யாதீர்கள் - நாமல்
போட்டிகளில் வெற்றிபெற முடியாத காரணத்தால் மன வேதனைகள் இருந்தபோதிலும், வீரர்களின் மனநிலையை பாதிப்படையச் செய்யும் வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐந்து வருடங்களாக உடல் தகைமை இல்லாமல் விளையாடிய ஒருவருக்கு ஒரே நாளில் உடல் தகைமையை மேம்படுத்திக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் நாங்கள் கிரிக்கெட் குழுவிற்க நாங்கள் சில கால அவகாசம் வழங்குவோம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment