இலங்கையில் கட்டடத்துறையில் பாரிய புரட்சி - இன்று திறக்கப்படும் பிரமாண்ட கட்டடம்
இலங்கையில் நிர்மாணத்துறையின் புரட்சியாக நிர்மாணிக்கப்பட்ட வித்தியாசமான தொடர்மாடி குடியிருப்பு இன்று -12- திறக்கப்படவுள்ளது.
கொழும்பு கொம்பெனித்தெருவில் உள்ள எல்டெயார் (Altair) தொடர்மாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று திறக்கப்படவுள்ளது.
இராஜாங்க அமைச்சர்களான நாலக்க கொடஹேவா, அஜித் நிவாட் கப்ரால் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் தலைமையில் இந்த திட்டம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
68 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் எல்டெயார் தொடர்மாடி குடியிருப்பு திட்டம் 230 மீற்றர் உயரம் கொண்டதாகும். இது தவிர 4 விதமான 407 அதிசொகுசு வீடுகளும் அவற்றில் அடங்குகின்றன.
(தமிழ்வின்)
Post a Comment