Header Ads



கறுப்பு ஞாயிறு அனுஷ்டிப்பு - நீதியை கோரும் மக்கள் (படங்கள்)


- இஸ்மதுல் றஹுமான் -

நீர்கொழும்பில் உள்ள அணைத்து கத்தோலிக்க தேவஸ்தானங்களிலும் இன்று "கறுப்பு ஞாயிறு" அனுஷ்டிக்கப்பட்டன. காலை ஆராதனையின் பின்னர் அந்தந்த தேவஸ்தானங்களின் பங்குத் தந்தைகளின் தலைமையில் அமைதியான முறையில் தமது எதிர்ப்பைக் காட்டினர். கறுப்பு நிற ஆடை அநிந்திருந்த பக்தர்கள் " உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கைதேர்ந்த ஒருவரால் திட்டமிடப்பட்ட மனித படுகொலை. இதில் நேரடியாக தொடர்புடையோருக்கும், கடமைகளை தவர விட்டவர்களுக்கும் சட்டம் நீதி வழங்கட்டும். உண்மையை வெளிப்படுத்துங்கள்" என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்றனர்.






No comments

Powered by Blogger.