Header Ads



பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய பிக்குமார் உள்ளிட்ட, மதத் தலைவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை


பௌத்த பிக்குமார் உள்ளிட்ட பிற மதத் தலைவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய கண்டி மாவட்டத்தில் பௌத்த பிக்குமார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று 2021.02.20 ஆரம்பிக்கப்பட்டது.

மதத் தலைவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதற்கமைய முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் அனைத்து பௌத்த பிக்குமார் உள்ளிட்ட ஏனைய மதத் தலைவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும். 

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் பதுளை மாவட்ட பௌத்த பிக்குமார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பிரதமர் ஊடக பிரிவு

No comments

Powered by Blogger.