அம்பாறையில் நிலநடுக்கம் 4.0 ரிக்டர் நிலநடுக்கம்
அம்பாறை, பொத்துவில் கடற்கரை பகுதியில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பொத்துவில் கடற்கரை பகுதிகளில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொத்துவில் – சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன் சதுக்கம், களப்புகட்டு ஆகிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment