காலி மைதானத்திற்கு வந்த உடும்பு
இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிக்கிடையில் காலி மைதானத்தில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியை காண நேற்று புதிய விருந்தினர் ஒருவர் வருகைத் தந்தாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி நடைபெற்ற சந்தர்ப்பத்தில் மைதானத்தில் உடும்பு ஒன்று உலவித் திரிந்துள்ளது.
இது தொடர்பில் டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையானது 'இலங்கை கிரிக்கெட் அணிக்கு மேலதிக களத்தடுப்பாளர் ஒருவர் போட்டிக்காக அழைக்கப்பட்டுள்ளார்' என பதிவிட்டுள்ளது.
Post a Comment