ஜனாசா நல்லடக்கத்திற்கு அனுமதிகோரி, ஹெம்மாதகமயில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
கொரோனா தொற்றினால் மரணிக்கும் உடலங்களை அடக்கம்செய்ய அனுமதி கோரி, ஹெம்மாதகமயில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
கடந்த 29 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது. ஹெம்மாதகம நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹிதாயா நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த இவ்வார்ப்பாட்ட நிகழ்வில் பிரதேச மக்கள் நூற்றுககணக்கானோர் திரண்டிருந்தனர்.
அனைத்து விஞ்ஞான ரீதியான ஆய்வுகள், நிபுணர்களின் முடிவுகளை புறம் தள்ளி சிறுபான்மை சமூகங்களின் அடிப்படை உரிமைகளை மீறிய இச்செயல்பாட்டை கண்டித்து பிரதேச மக்களால் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எத்தனையோ முறை எண்ணினாலும் நுறு வருதுஇல்ல
ReplyDelete