Header Ads



கொரோனாக்கு இன்று 7 பேர் மரணம்


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது. 

அதன்படி, கொழும்பு 06 பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய ஆண் ஒருவரும், நிட்டம்புவ பகுதியை சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும், இரத்தினபுரி பகுதியை 76 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

அத்துடன் கொழும்பு சிறைச்சாலையின் 61 வயதுடைய ஆண் கைதி ஒருவரும், கொழும்பு 6 பகுதியை சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் எடேரமுல்ல பகுதியை சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.