மனிதம் மரித்துவிட்டதா...?
மிருகம் தன்னுறவை
மண்ணில் புதைத்து
தம்முறவின் மரியாதையைப்
பாதுகாக்க படித்துக் கொண்டது.
ஊர்வினைகள்
பறவினைகள்
காருண்யம் காட்டியெங்கும்
கறைபடிந்த உளத்தார்க்கு
கற்றுக் கொடுக்குது
விழுமியத்தை!
நீதியைக் கற்றதாய்
நீதிமன்றினை
நிந்திக்கும்
சாதி பேசும்
சாபம் பெற்றார்க்கு
சாந்தியெங்கே
ஈருலகில்?
மனிதத்தை மரிக்கடிக்கும்
இனவாதம் ஒரு
கெரோனா வைரஸ்
இன்றும் அதற்கு
மருந்து கிட்டவில்லை
மரத்துப் போய்விட்டன
எமது உணர்வுகள்!!!
மனிதம் மரித்துவிட்டால்
மண்கீழ் நல்லமென
கணிதம் கற்றதென்
கல்புக்குத் தெரியதா!
கல்லாகிப் போன
கல்புக்களை
நல்லாக்கிவிடு
நாயனே!
எம் சமூகம்
மனிதர்களாய் வாழ்ந்திட
மனிதத்தைக் கண்டிட.
- As shaik Nagoor Lareef -
Post a Comment