Header Ads



தொற்று நோய் விஞ்ஞான பிரிவு, சரியான விபரங்களை வெளியிடவில்லை


தொற்று நோய் விஞ்ஞான பிரிவு நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமை பற்றிய சரியான விபரங்களை வெளியிடவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டொக்டர் ஹரித அலுத்கே இந்த விடயம் தொடர்பில் இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கொவிட் நோய்த்தொற்று பரவுகை விவகாரத்தில் இலங்கை தற்பொழுது எந்த இடத்தில் இருக்கின்றது என்பது பற்றிய புதிய தகவல்கள் அடங்கிய விபரங்களை தொற்று நோய் விஞ்ஞான பிரிவு கிரமமாக வெளியிடத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது ஓர் ஆபத்தான நிலைமை எனவும், சரியான தகவல்கள் வெளியிடப்பட வேண்டியது இன்றியமையாதது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளில் கொவிட் நோய்த் தொற்று பரவுகை ஏற்படுவது மிகவும் ஆபத்தான நிலைமையாகவே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. இலங்கையில் விஞ்ஞானமா ? சும்மா இருங்க டாக்டர் சிரிப்பு வருது.

    ReplyDelete

Powered by Blogger.