Header Ads



"கண்டி மாவட்ட மக்களுக்கு, சரியான தகவல்களை வழங்கவும்"


கண்டி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் 24 கொரோனா  தொற்றாளர்களே பதிவாகியுள்ளனரென, கண்டி பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் சேனக தலகல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அறிக்கையொன்றை வெளியிட்டே அவர் மேற்கண்டவாற தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 4ஆம் திகதி 6 தொற்றாளர்களும் 5ஆம் திகதி 18 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், சில ஊடகங்களில் போகம்றை பழைய சிறைச்சாலை  தொற்றாளர்களுடன் கடந்த 2 நாள்களாக 100-200 தொற்றாளர்கள் கண்டியில் இனங்காணப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செய்திகள், கண்டி மாவட்ட மக்களுக்கு அநாவசிய பீதியை ஏற்படுவத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.