இன்று ஞாயிறும் 5 பேர் மரணம் - பிரதேச விபரங்கள் இணைப்பு
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய இதுவரை நாட்டில் 176 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயரிழந்துள்ளனர்.
கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும், பனாகொட பிரசேத்தை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 08 பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Post a Comment