Header Ads



5 தனியார் வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி


5 தனியார் வைத்தியசாலைகளில் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதென, சுகாதார அமைச்சின் ஆய்வு மற்றும் பயிற்சிகள் தொடர்பான பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அன்றாடம் செய்யப்படும் பிசிஆர் பரிசோதனைகளை 20,000ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், 13,000- 14,000 வரையான பிசிஆர் பரிசோதனைகளே அன்றாடம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் இதன் எண்ணிக்கை 20,000 அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கான வசதிகள் சாதாரண வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக பல வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

1 comment:

  1. வியாபார பொருளாக மாறிவரும் கொறோணா

    ReplyDelete

Powered by Blogger.