Header Ads



பிரண்டிக்ஸ் கொத்தணியை விசாரிக்க CID யின் சிரேஷ்ட அதிகாரிகள் நியமனம்



மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணி தொடர்பில் விசாரிக்க குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் துணை ஆணையாளரின் வழிகாட்டுதலின் கீழ் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை நியமித்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டமா அதிபருக்கு தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவல்  தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு  சட்டமா அதிபர்  தப்புல டி லிவேரா பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.