இலங்கையிலுள்ள பாகிஸ்தான் கைதிகளை, அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை
போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதிகள், பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் வைத்து பாகிஸ்தான் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
சிறைச்சாலைகளின் ஆணையாளர் துஷார உபுல்தெனியவின் தகவல்படி, 44 பாகிஸ்தான் கைதிகள், அந்த நாட்டைச் சேர்ந்த சிறை அதிகாரிகளிடம் நாளை (03) ஒப்படைக்கப்படவுள்ளனர்.
பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையில் குற்றவாளிகளை மாற்றுவது தொடர்பான 2004 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இந்த கைதி ஒப்படைப்பு இடம்பெறுகிறது.
குறித்த ஒப்பந்தப்படி தண்டனையில் குறைந்தபட்சம் ஆறு மாதங்களை தாண்டிய சந்தர்ப்பங்களில் நாட்டுக்கு நாடு இடமாற்றங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
இதேவேளை பாகிஸ்தான் ஊடகங்கள், இலங்கையிலிருந்து பாகிஸ்தான் கைதிகளை திரும்ப அழைத்து வரும் செய்தியை கடந்த வாரமே வெளியிட்டிருந்தன.
Post a Comment