Header Ads



இலங்கையில் கொரோனா மரணம் - 44 ஆக உயர்ந்தது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். 

அவர்களுள் ஒருவர் கொழும்பு 11 பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபர் உயிரிழந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. 

அத்துடன் களனி பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களிக் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.