இலங்கையின் 18 வது விமானப்படைத் தளபதியாக சுதர்ஷன பதிரண - ஜனாதிபதியுடன் சந்திப்பு
புதிய விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரண இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
சுதர்ஷன பதிரண இலங்கை விமானப் படையின் 18வது விமானப் படைத் தளபதியாவார்.
சுதர்ஷன பதிரண போர் விமானங்களை இயக்கி பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரியாவார்.
1990ஆம் ஆண்டு சுபர் சோனிக் F7 மற்றும் 1995ஆம் ஆண்டு கபீர் விமானங்களை இலங்கைக்கு கொண்டுவந்த விமான ஓட்டியாகவும் கபீர் ஜெட் படையணியின் கட்டளைத் தளபதியாகவும் சுதர்ஷன பதிரண செயற்பட்டுள்ளார்.
விமானப் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி அவர்களை சந்திக்கும் பாரம்பரியத்திற்கு ஏற்ப ஜனாதிபதி அவர்களை சந்தித்ததுடன், நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.11.04
Post a Comment