பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் முக்கிய அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண் ணிக்கையை சுகாதாரத்துறை நிர்ணயிக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணி யாளர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறையினர் நிர்ணயம் செய் வார்கள் என அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பிராந்திய சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைகளுக்கு அமைய தொழி ற்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் எத்தனை ஊழியர்கள் பணி யாற்ற முடியும் என்பது குறித்து நிர்ணயிக்கப்படும் எனவும் என அவர் மே லும் தெரிவித்தார்.
பணியிடங்களுக்கு வருகை தரும் பணியாளர்களின் உடல் வெப்ப நிலை கட்டாயமாகப் பரிசோதனை செய்யப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அத்துடன், கை கழுவுவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட ஏனைய சுகாதார வசதிகள் அனைத்தும் கட்டாயமாக் கப்பட வேண்டும் எனவும் அவர் மே லும் தெரிவித்துள்ளார்.
Post a Comment