Header Ads



பக்க விளைவு : கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியது 'ஜான்சன் அண்ட் ஜான்சன்'


கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபருக்கு பக்க விளைவு ஏற்பட்டதால், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பரிசோதனையை நிறுத்தியுள்ளது.

உலகையே அச்சிறுத்திக் கொண்டிருக்கும் கொரோனவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒவ்வொரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் ஒரு தடுப்பூசியை தயாரித்துள்ளது.

இந்த தடுப்பூசியை மனித உடலில் செலுத்தி முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரசோதனைகளை முடித்த ஜான்சன் அண்ட் ஜான்சன் மூன்றாம் கட்ட பரிசோதனையை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது, தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாத நிலை ஏற்பட்டது.

இதனால் தடுப்பூசியை பரிசோதனையை தற்காலிகமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுத்தி வைத்துள்ளது. 60 ஆயிரம் பேருக்கு பாதுகாப்பான முறையில் தடுப்பூசி செலுத்தி சோதனை மேற்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.

மு. றூமி அப்துல் வாஹிது

No comments

Powered by Blogger.