74 பௌத்த மதகுருமார் தனிமைப்படுத்தப்பட்டனர்
பிலியந்தல சிலுமின விகாரையை சேர்ந்த 74 பௌத்த மதகுருமார் உட்பட90 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பிலியந்தலையில் உள்ள ககாபொல சிலுமின மகாவிகாரையின் தலைமை மதகுரு உட்பட 90 பேரையே தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கிம்புலாவலயிலிருந்து குறிப்பிட்ட விகாரைக்கு சென்ற ஒருவர்கொரோனாவினால்பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்தே அதிகாரிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவரின் மகன் குறிப்பிட்ட விகாரையின் மதகுரு எனவும் தகவல்கள்வெளியாகியுள்ளன.
Post a Comment