'20' க்கு எதிர்ப்பு, இரட்டை பிரஜாவுரிமைக்கு ஆதரவு - முஷாரபின் இரட்டை நிலைப்பாடு
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் 17ஆவது பிரிவான இரட்டை பிரஜாவுரிமைக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.எம்.முஷாரப் வாக்களித்துள்ளார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இவர் எதிராக வாக்களித்த நிலையிலேயே குறித்த உப பிரிவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியும் என குறித்த பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதன்போது 157 பேர் ஆதரவாகவும் 64 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.
இதுக்கு தான் ஆங்கிலத்தில் double game என்று சொல்றது.
ReplyDelete