பாடசாலை மாணவர்களுக்கு வவுசர்களுக்கு பதிலாக, சீருடை துணிகளை வழங்க அமைச்சரவை தீர்மானம்
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுசர்களுக்கு பதிலாக சீருடை துணிகளை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இன்று (28) பிற்பகல் 5 மணியளவில் அமைச்சரவை கூடியது.
ஜனாதிபதி செயலத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தின்போது பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை துணி வழங்கும் நடைமுறையை மீள செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கூறினார்.
இதேவேளை, மாடுகள் வெட்டப்படுவதை தடுப்பது தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்கவும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலகு ரயில் சேவை திட்டத்தை கைவிடவும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் வாசுதேவ நானாயக்கார கூறினார்.
Post a Comment