Header Ads



9 மாகாண சபைகளை, 3 மாகாண சபைகளாக மாற்ற யோசனை


பண்டைய அரச காலத்தில் இருந்தது போல் உருகுணை, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மூன்று மாகாணங்களை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல நிபுணர்கள் குழுவால் தனக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


தற்போதுள்ள 09 மாகாண சபைகளை மூன்று மாகாண சபைகளாக மாற்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


தற்போது மாகாண சபைகள் இருப்பதால், விரைவில் தேர்தல் நடத்தப்படும் எனவும் மாகாண சபைகள் தொடர்ந்தும் செயற்பட யோசனையில்லை என வீரசேகர தெரிவித்தார்.


இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர மாகாண சபைகளை மாற்ற முயற்சிப்பதாகவும் அவர் நினைத்தாற்போல் அதனை மாற்ற முடியாது எனக் கூறி முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள எதிர்ப்புக்கு பதிலளிக்கும் வகையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.