கொழும்பில் 60 ரூபாய்க்கு தேங்காய்
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் லொறி மூலம் தேங்காயை விற்பனை செய்ய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய தேங்காயை 60 ரூபாய் சலுகை விலைக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய சந்தையில் தேங்காயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்தே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டதென அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
Post a Comment