Header Ads



கும்பலாக வரும் நரிகள், மில்லனிய கிராம மக்கள் பீதி - இதுவரை 2 பேர் மரணம்


களுத்துறை, மில்லனிய கிராமத்தில் நரிகள் அச்சுறுத்துவதால் முழு கிராமமே பீதியில் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.


கும்பலாக நரிகள் கிராமத்திற்குள் புகுந்து மக்களை கடித்து குதறுவதனால் மக்கள் கடும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.


கும்பலாக நரிகள் கிராமத்திற்குள் புகுந்து கடிப்பதனால் மக்கள் உச்சகட்ட பீதியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


கடந்த வாரம் 8 வயதுடைய சிறுமியின் கழுத்தை நரி கடித்தமையினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிததுள்ளது.


அத்துடன் கடந்த ஒரு மாதத்திற்குள் அந்த கிராமத்தில் மேலும் ஒருவர் நரி கடித்து உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

1 comment:

  1. பசுவதை சட்டத்தின் முன், நரிகளுக்கெதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.

    மனிதன் செத்தாலும் மிருகங்கள் வாழவேண்டும் என்ற புதிய சட்டம் மிக விரைவில்.

    ReplyDelete

Powered by Blogger.