Header Ads



பிரதமர் மஹிந்தவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து - நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக தெரிவிப்பு

நாட்டில் நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுன மகத்தான முன்னணியில் உள்ளமைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 

உங்கள் தொலைபேசி அழைப்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி, இலங்கை மக்களுடன் வலுவான ஆதரவுடன், எங்கள் இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நாம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.