Header Ads



தேசிய பட்டியலில் இருந்து, நானே விலகினேன் - டில்ஷான்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (எஸ்.எல்.பி.பி) தேசிய பட்டியலில் இருந்து தானே விலகியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான், தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட பொதுஜன பெரமுனவின் 17 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பட்டியலில் டில்ஷானின் பெயர் சேர்க்கப்படவில்லை.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த டில்ஷான், தேசிய பட்டியலில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எஸ்.எல்.பி.பி நிறுவனர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு கடிதம் அனுப்பியதாக கூறினார்.

"என்னை விடவும் தகுதியான ஒருவரிடம் அந்தப்பதவி செல்ல வேண்டும் என்று நான் உணர்ந்தேன். நான் கிரிக்கெட் விளையாடுவதில் அதிக நேரம் செலவிட்டேன், எனவே இப்போது எனது குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட விரும்புகிறேன். எனவே இந்த நேரத்தில் செயற்பாட்டு அரசியலில் நுழையாமல் இருப்பதே சிறந்த முடிவு என்று நான் நினைத்தேன் ”என்றார்.

"ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரசாரத்தில் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், ஜனாதிபதி கோட்டாபய நாட்டை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றும் டில்ஷான் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.