Header Ads



இனவெறி குறித்து, குமார் சங்கக்கார


இனவெறிக்கு எதிராக கடுமையான கருத்தினை வெளியிட்டுள்ள குமார்சங்கக்கார விழுமியங்களை அடிப்படையாக கொள்ளாத கல்வி பாரபட்சத்தை தடுத்து நிறுத்தாது என தெரிவித்துள்ளார்.

உண்மையான வரலாறை கற்பிப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ள சங்கக்கார சுத்தம் செய்யப்பட்ட வரலாறை கற்பிப்பதால் பயனில்லை என தெரிவித்துள்ளார்.

ஜோர்ஜ்புளொயிட்டின் கொலைக்கு பின்னர் தீவிரமடைந்துள்ள பிளக்லைவ் மட்டர்ஸ் குறித்து கருத்து வெளியிட்டுள்ள குமார் சங்கக்கார நீங்கள் கல்விகற்றவரா இல்லையா என்பது முக்கியமில்லை,மிகச்சிறந்த கல்வியைகற்றவர்கள் மிகமோசமான செயல்களில் ஈடுபடுவதை நான் பார்த்திருக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கல்வி விழுமியங்களை அடிப்படையாக கொண்டதாக அமைந்திருக்காவிட்டால் நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பிளக்லைவ்ஸ் மட்டர் இயக்கத்தையும்,உலகில் பாரபட்சம் இனவெறி ஆகியவற்றையும் கருத்திலெடுத்தீர்கள் என்றால் வரலாற்றை திரிபுபடுத்தாமல் பிள்ளைகளுக்கு கற்பிப்பது அவசியம் என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றை சுத்தப்படுத்தி கற்பிக்ககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லவர்கள் கெட்டவர்கள் மோசமானவர்கள் அனைவர் மீதும் கவனத்தை செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ள குமார் சங்கக்கார உண்மையான வரலாறு என்னவென்பதை ஒருவர் அறிந்துகொண்டபின்னர் மனப்பாங்கில் மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மாற்றங்கள் ஒரே நாளில் ஏற்படாது,அது நீங்கள் ஒரு மாதம் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு பின்னர் மறந்துபோகின்ற விடயமல்ல அது உலகில் அனைவரையும் உள்ளடக்கிய மெதுவான உறுதியான நடவடிக்கை எனவும் குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. VILAMBARAM THEDAAMAL, NERADIYAAKAVEY CHAMPIKAVUKKUM, NAANASARAVUKKUM, ITHANAIPATRI SHONNAAL ENNA.

    ReplyDelete
  2. எங்களுடைய இலங்கை நாட்டில் மட்டுமல்ல ஏன் மத்திய கிழக்கு மற்றும் வளர்ந்த நாடுகளிலும் வாழும் மிக அதிகமாகக் கல்வி கற்றவiர்கள்கூட பிறழ்வான நடத்தையுடையவர்களாக வாழ்வதனை நாங்கள் நோக்கக்கூடியதாக இருக்கின்றது. ஒரு மனிதன் சிறந்தவனாக தன்னை மாற்ற வேண்டுமாக இருந்தால் தான் பெற்ற கல்வியினை விட அவனுக்கு வேறு பலவிடயங்கள் பக்கபலமாக இருத்தல் வேண்டும். கல்வி கற்பதனால் ஒருவன் அறிவாளியாக வேண்டுமானால் மாறலாம். ஆனால் பெரிய மனிதனாக (Gentleman, Lord, Ethical) மாறி விட முடியாது. இது அவரகள் பெறுகின்ற எல்லா வகையான கல்விமுறைமைகளுக்கும் பொருந்தும். 01 - கல்வியைக் கற்கின்ற சூழல் 02 - கல்வி என்பது தனியே பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் கற்கும் கல்வியை மட்டும் குறிக்காது. கற்கும் முறை கற்பிக்கும் ஆசிரியர்கள். சேர்ந்து உறவாடும் சக மாணவர்கள் உசாவும் நூல்கள் தனது சொந்தக் குடும்பம் தனது உறவினர்கள் மிக முக்கியமாக தனது நண்பர்கள் தொடர்பாளர்கள் இப்படியானவரகள் அவருடைய நடத்தைக் கோலங்களில் பங்கு எடுக்கின்றனர். இவரகளுடைய நடத்தைக் கோலங்கள் எவ்வாறு அமைந்து காணப்படுகின்றதோ அவ்வாறே இந்த மனிதனின் பழக்க வழக்கங்களும் அமைந்து காணப்படும். வெறும் கல்வி முறைமைகள் மாத்திரம் ஒரு மனிதனைச் சீராக்காது என பெரும் பெரும் கல்வியியலாளர்கள் கூறிச் சென்றுள்ளனர். எமது நாட்டில் ஆங்காங்கே காணப்படும் சில அரசியல்வாதிகள்இ மதகுருமார் கல்வியியலாளர்கள் கற்றறிஞர்கள் என நாம் நம்பும் பலரின் வெளிவாழ்க்கை அமைப்பு விமர்சனத்திற்குரியதாகக் காணப்படுவதற்கும் இந்நிலைமையே காரணமாகும். இவரகள் கல்வி கற்றவரகளாக இருப்பதனாலும் மேல்தட்டுவாசிகளின் செல்வாக்கு அவரகளுக்கு இருப்பதனாலும் நிர்வாகத் துறையிலுள்ளவரகளாலும் நீதித துறையில் உள்ளவரகளாலும் பல சந்தர்ப்பங்களில் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றது. இவற்றிற்கு எமது நாட்டின் சூழ்நிலை உதாரணமாக இருக்கினறது.

    Not only in our country Sri Lanka but also the Middle East and developed countries, we can aim to make even the most educated people live with deviant behaviours. If a man wants to change himself for the better, he must have the support of many other things than the education he has received. Education can change a person if he wants to be intelligent. But you can't become a great man (Gentleman, Lord, Ethical). This applies to all types of education they receive. 01 - The context in which education is learned 02 - Education does not only refer to education in schools and colleges alone. Teachers who teach the learning method. Relationships with fellow students, Reference Texts, His own family, His relatives, Most importantly his friend Relatives. Such people take part in his behaviour. The man's habits are similar to those of his behaviour. The great educators have gone so far as to say that mere educational systems do not discipline a man. This situation is also the reason why the outreach system of some of the politicians and clergy academics found in our country is seen as critical by many of whom we believe to be scholars. Because they are educated and have the influence of the upper classes, they are often unable to do anything by those in the administration and the judiciary. The situation in our country is an example of this environment.

    ReplyDelete

Powered by Blogger.