Header Ads



விமான நிலையத்தை தற்போது திறக்காதிருக்கத் தீர்மானம் – பிரசன்ன ரணதுங்க

விமான நிலையத்தை தற்போது திறக்காதிருக்கத் தீர்மானித்துள்ளதாகச் சுற்றுலா மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பண்டார நாயக சர்வதேச விமான நிலையத்தை தற்போதை க்கு திறக்க வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், விமான நிலையத்தை இப்போதைக்குத் திறக்க வேண்டாம் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து பண்டாரநாயக சர்வதேச விமான நிலையம் மூடப் பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் விமான நிலையத்தைத் திறக்கலாம் என விமானச் சேவைகள் அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் கடந்த சில நாட்களில் நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது என்பதுடன், மக்கள் குழப்பத்தில் உள்ள நிலையில் விமான நிலையத்தை திறப்பது நாட்டிற்கு மீண்டும் நெருக்கடிகளை உருவாக்கும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக மோசமாக உள்ள நிலையில், இந்தியாவிலிருந்து ஒரு பிரஜையேனும் நாட்டிற்குள் வந்தால், இலங்கையில் நிலைமைகள் மோசமடையும் என்றும் இலங்கையர்கள் கூட இப்போது நாட்டிற்குள் வருவதில் சிக்கல்கள் உள்ளது.

எனவே இப்போதைய நிலையில் விமான நிலையத்தைத் திறப்பது சிக்கலான விடயம் என சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்தே விமான நிலையத்தை தற்போது திறக்காதிருக்கச் சுற்றுலா மற்றும் விமானச் சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

1 comment:

  1. நீங்கள் விமான நிலையத்தை திறந்திருந்தாலும், எவர்கள் எரிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளார்களோ, அந்த - தாம் எரிக்கப்படுவதை விரும்பாத இப்பூகோலத்தின் 180 கோடி முஸ்லிம்களில் எவரும் சுற்றுலா அல்ல, உங்கள் சுற்று வட்டத்துக்கே வர மாட்டார்கள்.

    உங்கள் அறியாமையும் அநீதியும் நிறைந்த  'ஜனாஸா எரிப்புச் சட்டத்தால்' பாதிக்கப்படப் போகும் இலங்கையர்கள், உங்கள் தர்பாரை அகற்றுவதற்குத் தம் வாக்குகளைப் பயன்படுத்துவதில் ஆச்சரியமே இருக்காது!

    ReplyDelete

Powered by Blogger.