Header Ads



அவன்கார்ட்டிடமிருந்து ராஜித்த 2 கோடி ரூபா லஞ்சம் பெற்றார் - விஜேதாச


கடந்த கால அரசாங்கத்தில் முன்னாள் சுகாதார அமைச்சராகக் கடமையாற்றி ராஜித்த சேனாரத்ன அவன்கார்ட் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட சுமார் 2 கோடி ரூபா லஞ்ச ஊழல் மோசடி தொடர்பான தகவலை அந்த கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார்

ஊடகவியலாளர் சந்திப் ஒன்றில் தனது குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு ராஜித்த சேனாரத்ன சவால் விடுத்ததன் பேரில் இதற்குப் பதில் வழங்குவதன் மூலமாக இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக விஜேயதாச தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் பணப் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தும் பல காசோலைகளைக் கொண்டுவந்ததை அவதானித்தேன்.

இந்நாட்டின் தண்டனைச் சட்டத்தின் படி லஞ்ச மோசடியில் ஈட்டுப்பட்டு பணம் பெற்றுக்கொண்டவருக்கு 2 முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனைகள் விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.