Header Ads



என்னை விமர்சிக்கும் அனைவருக்கும், நான் கூறுவது ஒன்றுதான்...

(ஆர்.யசி)

என்மீது நம்பிக்கை வைத்தே ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தனர். எனது வெற்றியில் தமிழ் மக்களின் பங்களிப்பு அதிகமாகும். அதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்  என முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதேவேளை, மத்திய வங்கி பிணைமுறி ஊழலை விசாரிக்கவும் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யவும் நான் எடுத்த முயற்சியே நல்லாட்சி அரசாங்கம் பிளவுபட காரணமாக அமைந்தது. அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய நான் எடுத்த முயற்சி அதிகாரத்தில் இருந்த சிலருக்கு பிடிக்கவில்லை.  

நிகழ்கால அரசியல் செயற்பாடுகள், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுத்த செயற்பாடுகள் குறித்து வீரகேசரிக்கு தெரிவிக்கும் போதே அவர் இவற்றை பகிர்ந்துகொண்டார்.  அவர் இதன்போது கூறுகையில், 

கடந்த 2015 ஆம்  ஆண்டு ஆட்சி மாற்றம் நாட்டின் கட்டாய தேவையாக இருந்தது, அதுவரை நாட்டில் நிலவிய மிக மோசமான செயற்பாடுகள், அதிகார அடக்குமுறைகள் என்பவற்றை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக நான் தலைமையேற்ற தீர்மானித்தேன்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த பின்னர் நாட்டில் ஜனநாயகத்தை முழுமையாக செயற்படுத்த என்னாலான சகல நடவடிக்கைகளையும் நான் முன்னெடுத்துள்ளேன் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதுமட்டும் அல்லாது நிறைவேற்று அதிகாரத்தை அதிகமாகவே கையாண்ட தலைவரும் நானேயாவேன். 

இந்த நாட்டில் எந்தவொரு அரச தலைவரும் முன்னெடுக்காத தைரியமான வேலைத்திட்டங்களை நான் எனது ஆட்சிக்காலத்தில் முன்னெடுத்தேன். நான் செயற்பட்டதை போல வேறு எந்த தலைவரும் செயற்பட்டிருக்க மாட்டார்கள். 

இலங்கையின் எந்த ஜனாதிபதி தனது அரசாங்கத்தில் இருந்த பிரதமரை நீக்கிவிட்டு தேர்தலில் போட்டியிட்டு தோற்ற ஒருவரை மீண்டும் பிரதமராக்கியுள்ளார் ? அப்போது பிரதமாராக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை  பிரதமராக்கினேன். 

இவ்வாறான தீர்மானங்களை வேறு எந்தவொரு ஜனாதிபதியாவது முன்னெடுத்துள்ளனரா. ஆகவே நான் ஏனைய ஜனாதிபதிகள் போல் அல்லாது தைரியமாக செயற்பட்ட நபர். 

இந்த நாட்டில் எனது நல்லாட்சி அரசாங்கத்தில் போன்று சுதந்திரம் வேறு எந்த ஆட்சியாளர்களும் வழங்கியிருக்க முடியாது. நான் வழங்கிய சுதந்திரத்தை கொண்டே ஊடகங்கள் என்னை தாக்கினர். இன்றும் விமர்சித்தே வருகின்றனர்.  

ஆனால் நான் அதனைக் கண்டு கவலைப்படவில்லை. ஊடக சுதந்திரமும் ஜனநாயகமும் என்னால் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நான் வழங்கிய சுதந்தரத்தை நானே விமர்சிக்க விரும்பவில்லை. என்னை விமர்சிக்கும் அனைவருக்கும் நான் கூறுவது ஒன்றுதான். நீங்கள் அனைவரும் இன்று என்னை விமர்சித்து கேலி செய்யும் சுதந்திரம் என்னால் வழங்கப்பட்டது என்பதை மறந்துவிட வேண்டாம். 

மத்திய வங்கி பிணைமுறி ஊழல். இதுவே நல்லாட்சி அரசாங்கத்திற்குள் குழப்பம் ஏற்பட பிரதான காரணியாக அமைந்தது.  

இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழலாக மத்திய வங்கி ஊழல் பதிவாகியது. மத்திய வங்கியில் பிணைமுறி மூலமாக இவ்வளவு பெறுமதியான தொகை களவாடப்பட்டது என்ற சரியான எண்ணிக்கை இன்னமும் கூறப்படவில்லை. 

மத்திய வங்கி பிணைமுறி குறித்து ஆராயும்  ஆணைக்குழுவை நியமித்தமையே நல்லாட்சி அரசாங்கத்தில் முரண்பாடுகள் ஏற்பட பிரதான காரணியாகும். அதாவது அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய நான் எடுத்த முயற்சி அதிகாரத்தில் இருந்த சிலருக்கு பிடிக்கவில்லை.

 அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய நான் சகல நடவடிக்கையும் எடுத்து சிங்கபூர் சென்று சிங்கபூர் பிரதமரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். 

அவர்களும் அர்ஜுன மகேந்திரனை எமக்கு வழங்க இணக்கம் தெரிவித்தனர். அதேபோல் சர்வதேச பொலிசாருக்கு நான் அறிவித்தல் விடுத்தேன். 

நிதி மோசடியில் குறித்த நபரை தேடுவதாக சுட்டிக்காட்டி நான் அறிவிப்பொன்றை விடுத்தேன், ஆனால் எனது அரசாங்கத்தில் பிறிதொரு குழு சர்வதேச பொலிசாருக்கு வேறு கடிதம் ஒன்றினை அனுப்பினர். 

என்மீது நம்பிக்கை வைத்தே ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தனர். எனது வெற்றியில் தமிழ் மக்களின் பங்களிப்பு அதிகமாகும். அதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். 

அதேபோல் எனது ஆட்சியில் வடக்கு கிழக்கில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணிகள் விடுவிப்பு அதில் மிக முக்கியமான விடயமாகும். 

இந்த ஆட்சியில் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என நான் நம்பவில்லை. ஆனால் நான் வழங்கிய சலுகைகள் இவர்களால் வழங்க முடியுமா என்பது குறித்து என்னால் தெளிவாக கூற முடியாது. எவ்வாறு இருப்பினும் இந்த நாட்டில் தமிழ் மக்களும் சம உரிமைகள், அதிகாரத்துடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உள்ளேன் என்றார்.

3 comments:

  1. ஒருத்தனுக்கு எழும்பி நிக்கவே முடியலை ஆனா அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குதாம்... அது போல இருக்குது இவருடைய கதை

    ReplyDelete
  2. இந்த நாட்டின் பொது மக்கள் சார்பாக நாம் மைத்திரியிடம் வேண்டிக் கொள்கிறேன். பதவி காலத்தின் போது போலி ஆவணங்களை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து திறைசேரியிலிருந்து கொள்ளையடித்த கோடான கோடி பணத்தை உடனடியாக திறைசேரிக்கு திருப்பிக் கொடுப்பது. பொது மக்களின் பல்வேறு பொருளாதார முன்னேற்றத் திட்டங்களை பாராளுமன்ற அனுமதி பெற்று அத்தனை முன்னேற்றத் திட்டங்களும் பொலனருவ மாவட்டத்தில் மாத்திரம் தான் மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய வெறும் சுயநலத்துடன் மேற்கொண்ட திட்டங்களிலும் கொள்ளையடித்த் பொதுமக்கள் பணத்தை உடனடியாக திருப்பிச் செலுத்துவது. இந்த இரண்டையும் உடனடியாக செய்யுமாறு பொதுமக்கள் சார்பாக உடனடியாக இது நடைபெற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  3. Aatchi purintha Janathipathihalil kewalamana janathipathi neerthan.

    ReplyDelete

Powered by Blogger.