Header Ads



ஓமானில் இருந்து இலங்கை வந்த 5 பேருக்கு கொரோனா


இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

குறித்த 5 பேரும் ஓமானில் இருந்து இலங்கை வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2047 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 33 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி தற்போது வரை 1711 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.